0
இன்று உன் வாசலில்
அறம் பிழைத்த
கொலை அரசியலுக்கு
பலியான
பிரகீத் எக்னெலி கொட
மனைவி சந்தியா…
நீதிமன்றம் நீதி காக்க
வேண்டி நிற்பாள்
இவள் போல்
தேசமெலாம்
ஆயிரமாய் எங்கள் தாய்மார்
கருணைத் தெய்வமே
கண் திறப்பாய்!
இனபேதமில்லாமல்
நீதியைக் கொல்லும்
ஈனரை எல்லோர்க்கும்
காட்டி வைப்பாய்…
எழுகின்ற மக்களின்
ஒருமித்த பலத்தாலே
எண்ணிகை அரசியலை
ஓடச்செய்வாய்….
-நகுலேசன்