Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கவிதை | இதயம் உறைந்தவர்கள் | யவனிகா ஸ்ரீராம்

கவிதை | இதயம் உறைந்தவர்கள் | யவனிகா ஸ்ரீராம்

1 minutes read
வேளாண் சட்டங்களை எதிர்த்து, தொடரும் விவசாயிகள் போராட்டம்...இணையத்தில்  வைரலாகும் பேசும் புகைப்படம் | Farmers protest Delhi Punjab Haryana Farmers  Protest– News18 Tamil


இந்த வருடத்தின் குளிர்காலத்தை
அவர்கள் நெடுஞ்சாலைகளில் கழிக்கிறார்கள்

அது தேச வரலாற்றில்
நீண்ட ஒரு ட்ராபிக் ஜாம்

இரவின் பனியில் அவர்கள் நிலத்தின் மூக்கிலிருந்து வெப்ப ஆவி சீறுகிறது

கடுங்குளிரில் சில முதியவர்களின் இதயம் உறைந்து போயிருக்கின்றன

பதிலாக கந்தல் மற்றும் சுள்ளிகளில் நெருப்பு பற்றவைக்கப்படுகிறது

கார மிளகாய்களுக்கும் சுட்ட ரொட்டிக்கும் இடையில் முழங்குகிறார்கள்

தங்கள் நிலத்தில் வீசும் சூறாவளி
மழைக்காலநதியின் பேரோசை மேலும்
பள்ளத்தாக்குகளின் எதிரொலிகளால்
உருவான அக்குரல் வானைத் தொடுகிறது

விண்ணவர்கள் இறங்கும் அருள் காலம் வரப்போவதில்லை என்பதை அறிந்திருக்கிறார்கள்.

மாறாக நெடுஞ்சாலை விரிசல்களில் அவை வயலாகும்படி இப்போது அவர்கள் சிறுவிதைகளைப் பயிரிடுகிறார்கள்

வீறு கொண்ட இந்த மந்தைகளை
எப்பிடியும் தொழுவத்திற்கு விரட்டி விடலாம் என இடையர்கள் காத்திருக்க

தானியங்களின் மீது தங்கமுலாம்
பூசித்தருவதாக வாக்களிப்பவர்கள்
காணியிலுலகிற்கே கஞ்சாப் பயிரிடலாம் என உற்சாகிக்கிறார்கள்

அஹிம்சை துயருறுகிறது

முற்காலத்தில் இத்தேசத்தில் இடுப்புக்கச்சையணிந்து கைத்தடியுடன் திரிந்த ஒரு மனிதன்
சுட்டுக்கொல்லப்பட்டிருந்தான்

இனியொரு தோட்டா ஆயிரம் ஹெக்டேர்களைத் தாண்டி
சிறுதானியக் குதிர்களைத் துளைத்து
உங்கள் வங்கிகள் வாக்குச் சாவடிகள் பாலங்களின் மீதேறி ஒடுங்கிய ஒரு அடிவயிற்றில் பாயுமானால்

அண்டத்தில் என்ன அவதாரங்களே அகிலத்திலும் பெருவெடிப்புதான்.

யவானிகா ஸ்ரீராம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More