நாளை ஒரு காலம் வரும்
நமக்காய் ஒரு வாழ்வு வரும்
காலை வரும் பூக்கள் எல்லாம்
எங்கள் கண்ணீரை துடைக்க வரும்
காற்றில் ஒரு கீதம் வரும்
எங்கள் கவலைகளை போக்கிவிடும்
நேற்று வரை இருந்த துன்பம்
தீர்த்து வைக்க தெய்வம் வரும்
காலை வரும் பொழுதுகளில்
கவித் துளியாய் மழை தெறிக்கும்
நாளை வரும் விடுதலைக்காய்
குயில் கூவி எமை எழுப்பிவைக்கும்
வானமெங்கும் நிலவு வரும்
எங்கள் வயல் வெளியில் பூத்திருக்கும்
கனவொருநாள் எழுந்து வரும்
கார்திகையில் பூ மலரும்
எங்கள் தேசம் எல்லாம் விளக்கெரியும்
தெருக்கள் எல்லாம் பறவை பாடும்
நாளை வரும் காலம் என்று
நம்பிக்கையின் ஒளி தெரியும்.
பா.உதயன் ✍️