Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் தந்தை | கவிதை | யாழினி

தந்தை | கவிதை | யாழினி

1 minutes read

சிறிது சிரிப்புகள்
சிறிது கோபங்கள்
சிறிது விளையாட்டுகள்
சிறிது பரிகாசங்கள்

உள்ளே சிறுபிள்ளைத்தனம்
அனால், வெளியே தந்தை முகம்

சிலநேரம்
பிரளயத்திற்கு முன் தோன்றும் அமைதி
சிலநேரம்
ஆனந்தத்தில் திழைக்கும் அழகிய கொண்டாட்டம்

மாடாய் உழைப்பவரோ அவர்
அதனால் ‘மாடு’ என்று என்னை திட்டுவார் அவர்

கதைகள் கூறினாய்
தத்துவங்கள் கூறினாய்
ஆலோசனைகள் பல கூறினாய்
அறிவுரைகளும் பல கூறினாய்

உலகத்திற்கு என் விழிகளை ஊட்டினாய்
விழி நீர் வழிந்தால் விரல்களில் ஏந்தினாய்

உன்னோடு கசப்புகள் இருந்தாலும்
பாகற்காயே உடல் கொழுப்பை போக்கும் என்று உணர்த்தினாய்

இதற்க்கு மேல் என்சொல்வேன் என்றறியேன்
ஒற்றை வரியை தவிர
‘தந்தை எனும் சொல்லிற்கு ஈடு இணை இல்லை இப்புவியில்’

– யாழினி

நன்றி : எழுத்து.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More