‘நீ கொன்ற எதிரி நான்தான் தோழா’ கவிதை – கிளிநொச்சி புத்தக வெளியீட்டிற்கு முன்னோட்டமாக ஒரு நிகழ்வாக எறிகணை நாவல், நீ கொன்ற எதிரி நான்தான் தோழா உள்ளிட்ட நூல்களை இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்களின் கரங்களில் சேர்பிக்கப்பட்டன.
இது தொடர்பில் விடிவுகளின் தேடல் குழுமத்தினர் தெரிவித்துள்ளதாவது,
‘நீ_கொன்ற எதிரி நான் தான் தோழா’, மற்றும் ‘எறிகணை’ ஆகிய நூல்களை ஓமந்தை மத்திய கல்லூரியிற்கு தமிழினத்தின் புரட்சிமிகு எதிர்காலத்திற்காக வழங்கிவைத்தது விடிவுகளின் தேடல் குழுமம்.
ஓமந்தை மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் புலம்பெயர் தேசத்திலிருந்தும் தாய்மண்ணை நேசிக்கின்ற எழுத்தாளருமான “தியா” அவர்களது (‘நீ கொன்ற எதிரி நான் தான் தோழா’ கவிநூல் மற்றும் ‘எறிகணை’ நாவல்) ஆகிய நூல்களை விடிவுகளின் தேடல் குழும
தலைமை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் அலெக்ஷன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் லம்போதரன் கண்ணதாசன், வரதராஜ் கலையரசி ஆகியோர்கள் வழங்கிவைத்தனர்.
இதன்போது யாழ் பல்கலை மாணவனும் நிர்வாக குழு உறுப்பினருமான லம்போதரன் கண்ணதாசன் அவர்களினால் எமது வரலாற்றை அறிவதன் முக்கியத்துவம், ஈழத்தின் ஏனைய பிரபல இலக்கியக்களது வாசிப்பின் முக்கியத்துவம், பாடப்புத்தகங்களை தாண்டிய கல்வித்தேடலின் அவசியம்… என யாவும் தனது சொந்த அனுபவம் ஊடாக வலியுறுத்தப்பட்டது.
மேலும் கி.அலெக்ஷன் அவர்களினால் நூல் பற்றிய அறிமுகமும் தமிழினத்தின் கனவுகளை சொல்கின்ற ஈழ எழுத்தாளர்களது நூல்களை வாசிப்பதன் முக்கியத்துவமும் மற்றும் தமிழினத்தின் கல்வியின் தொன்மை மற்றும் கல்விப்புரட்சியின் அவசியம் தற்போது தமிழினம் எதிர்கொள்கின்ற கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு என யாவும் வலியுறுத்திக்கூறப்பட்டது.
அத்துடன் ஓமந்தை பாடசாலை ஆசிரியர் மூலமாக தமிழினத்தின் கல்விப்புரட்சிக்கான தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தப்பட்டது.