செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் நம்பிக்கை | கவிதை | குமரேசன் கிருஷ்ணன்நம்பிக்கை | கவிதை | குமரேசன் கிருஷ்ணன்

நம்பிக்கை | கவிதை | குமரேசன் கிருஷ்ணன்நம்பிக்கை | கவிதை | குமரேசன் கிருஷ்ணன்

0 minutes read

நம்பிக்கை …வை

நம்பிக்கையில்தான்
நகருகிறது
வாழ்க்கை …!

உன்
நாடி ..நரம்புகளில்
இரத்தவோட்டத்தை
மாற்று…

இளமையாய்
நம்பிக்கையை
ஊற்று…

வறண்ட பொழுதினில்
வாழ்வின் எல்லைவரை
செல்லும் மனது …

அப்பொழுதினில்
நாளைய உலகினை
நம்பிக்கை வேர்களே
நன்றியுடன் உரைக்கும்

விடிவோம் என்றுதானே
வீழ்கிறான் சூரியன் …

வளர்வோம் என்றுதானே
தேய்கிறான் சந்திரன் …

வீழ்ச்சியும்…
தேய்தலும்…
தேகத்திற்குத்தான்..?
ஆனால்
மனதிற்கு …!

தவறெனில்
‘தாய்’ புவியின்
தலைவிதியை
மாற்றிவிடு …

‘தரணி’ ஆள
தளிர்களுக்கு
தன்னம்பிக்கை
ஊற்றிவிடு …

காயங்கள்
ஆறிவிடும்…
கவலைகள்
ஓடிவிடும்…

கனவுகள்
கூடிவரும்…
காவிரியிலும்
நீர்வரும்…

மாற்றங்கள்
துளிர்விடும் …
மறைவுகள்
உயிர்பெறும்…

மனித மனம்
என்று
ஒளிபெறும் …?

தும்பிக்கைதான்
பலம்
யானைக்கு
நமக்கு
நம்பிக்கை …

நாளைய
உலகினை
வழிநடத்த
வந்தவன்
நீ …!

நம்பிக்கை…வை

நம்பிக்கையில் தான்
நகருகிறது
வாழ்க்கை …!

 

 

நன்றி : குமரேசன் கிருஷ்ணன் | எழுத்து.காம்

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More