Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் என்ன தவம் செய்தேனோ! | கவிதை | செல்வமுத்து மன்னார்ராஜ்

என்ன தவம் செய்தேனோ! | கவிதை | செல்வமுத்து மன்னார்ராஜ்

0 minutes read

தாயின் மடி நான் கண்ட சொர்க்கம்
என் மனம் தவிக்கும்போதெல்லாம்
என்னோட தஞ்சம் அவளின் மடியே….

அவளின் மடியில் தஞ்சம் புகும்
அந்த தருணத்தில் என் உயிர்பிரிந்தால்
அதுவே எனது பாக்கியம்…

விடிந்து எழும்போதும் அவளின்
தரிசனம்
இரவில் உறங்குமுன் அவளின் தரிசனம்
அவளின் புன்னகையில் தான்
உயிர் வாழ்கிறேன் நான்…

அன்று என்னை ஈன்றப்போது
அவளின் கனவுகள் என்னவோ
இன்று என் கனவெல்லாம்
அவளின் சந்தோசமே….

எனக்காக சுவாசித்தாள்
எனக்காக யாசித்தாள்
என் வாழ்க்கை வளம்பெற
முழுநேரம் யோசித்தாள்…

என்ன தவம் செய்தேனோ
இந்த ஏழையின் வாழ்வில்
வரமாக என் தாய்…

நன்றி : செல்வமுத்து மன்னார்ராஜ் | எழுத்து.காம்

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More