கிளி பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திரு மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய “அது ஒரு அழகிய நிலாக்காலம்” வன்னியின் மூன்று கிராமங்களின் கதை நூல் வெளியீட்டு விழா சுப்ரமணியம் இராசம்மா மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது.
வணக்கம் இலண்டன் இணையத்தளத்தில் தொடராக வெளிவந்த இத் தொகுப்பு வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கிளிநொச்சியின் மூன்று பூர்வீகக் கிராமங்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் பேசும் இத் தொகுப்பு மக்கள் கட்டி எழுப்பிய நாகரிகத்தையும் பண்பாட்டையும் மண்மணம் நிரம்பி வழியப் பேசுகின்றது.
இதேவேளை பரந்தன் இந்து பழைய மாணவர் சர்வதேச ஒன்றியம் உள்ளிட்ட பிரதேச அமைப்புக்கள் மற்றும் சர்வதேச ஒன்றியங்கள் என்பன நிகழ்வுக்கு தமது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை இந் நிகழ்வுக்கு நேரில் வர முடியாதவர்கள் மற்றும் புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் உறவுகள் கீழே உள்ள இணைப்பின் வாயிலாக விழாவை பார்க்கலாம்.
http://zecastlive.com/event/270767/template
நூல் வெளியீட்டு விழா
காலம்: 06/08/2022 காலை 8.30 மணி
இடம்: சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபம்
குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி.
நிகழ்வு தொடர்பான மேலதிக விபரங்களை அறிய