Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் ஏறுமுகம்! | கவிதை | கவிஞர் வேலூர் முத்து ஆனந்த்

ஏறுமுகம்! | கவிதை | கவிஞர் வேலூர் முத்து ஆனந்த்

1 minutes read

 

என்னையும் உன்னையும்

நெருங்க விடாமல் தடை வரும்போது

நம்அன்பு தவிக்கலாம்!

ஆயிரம் இன்னல்கள் களம் புகலாம்!

இன்பம் விடுமுறையில் செல்லலாம்

ஈதலுக்கு வழியில்லாமல் போகலாம்

உண்மையான துடிப்பு உறைந்து விடலாம்

ஊக்கம் கோபித்து ஒதுங்கலாம்

எண்ணங்கள் மறையலாம்

ஏக்கங்கள் ஊற்றெடுக்கலாம்

ஐயம் இறுக்கமாகக் கட்டி விடலாம்

ஆனால் –

ஒற்றுமை என்றைக்கும் ஒன்று சேர்க்கும்

ஓயாமல் பாயும் நம்  *காதல் ஒவ்வொரு வினாடியும்

பலம் கொடுக்கும்

பலன் அளிக்கும்!

அன்பு விலகியிருக்கும்போதுதான்

ஆற்றல் அதிகரிக்கும்

இன்முகம் தரிசனம் வழங்கும்

ஈகை குணம்தான்

உன் உண்மையான பேரழகு

ஊரும் உலகமும் சுதந்திரம் பெறுகையில்

ஊட்டச் சத்துகள்

நம்  *காதலுக்கும்கிடைக்கும்

எந்த வழி கிடைத்தாலும்

ஏறுமுகம்தான் நம் இருவருக்கும்!

ஐந்து விரல்களென்ன அப்பொழுது பத்து விரல்களும் இணையலாம்!

ஒன்பது கிரகங்களும் ஒதுங்கி நின்று

ஓசையின்றி நம் அன்பைப்

பார்த்துப் பார்த்து ரசிக்கும்!

 

– காதல்கவிஞர் வேலூர் முத்து ஆனந்த்

 

நன்றி : தேன்சிட்டு

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More