பங்கப்பட்டு பழனங்கெட்டு
திங்கள் முகமெனோ சலனப்பட்டு
சாப்பாடின்றி கூப்பாடு போட்டு
பாணின் பிணியாய் வீதிமெவினியோ
இந்த வீண்வாழ்வு காவினியோ
துக்கப்பட்டு துயரப்பட்டு
ஏக்கப்பட்டு தாக்கப்பட்டு
ஏக்கிய ராச்சியந் தன்னில்
பூச்சியத்துள் அடைக்கப்பட்டாயோ
புழுவிலும் இழியனோ நீ
சிங்கம் பட்டு தாமரை மொட்டு
குட்டில் பட்டும் பட்டம் விட்டாய்
சட்டை கிழிய சன்னதங் கொண்டாய்
சிங்கம் தங்கமென்றாய் பங்கம்
வங்கமாச்சே சேத்து வைத்த
சொத்திலில்லை சோத்தில் வைச்சார் கையை அவர் தலையில் வைத்தாய்
நெருப்பை நீயே
வாக்கு ஒன்றைப் போட முன்னர்
விரலின் விசையை திசையறிந்து
போட்டலென்ன பேப்பயலே
பாப்பார் பழகுவார் காப்பார்
வாப்பார் என்று முழங்கினாயே
தூப்பார் அவரல்லோ
போய்ப் பார் வீட்டில் பிள்ளையழும்
மாடு மழும் மழலை விழும்
பெற்றோரை மதிக்காட்டியும் பெற்றோலை மதியென்பாய்
உற்றாரும் உறவினனும் சாமான்
பதுக்கியோர் மட்டுமென்பாய்
பாணொன்றைத் தருவோர்
பாரெல்லாம் தெய்வமென்பாய்
பனடோலைத் தந்தாலே
பல டோஸ் போட்டதென்பாய்
நட்டாற்றில் நாயாய் குரைப்பதே
வழமையென்பாய்
தமிழனை அழித்ததால்
தாகமாய்த் துடிக்கிறாயே
தமிழனில் பூமியில்
அவர் சாமியுடன் வாழ்ந்திருந்தால்
பொருண்மியம் வளர்ந்திருக்கும்
பொங்கி எழாமல் தூங்கிடலாம்
அன்றொரு அரசன்
சோழனாம் பெரியோன்
தெற்காசியாவின் செல்வக் களஞ்சியமாய்
ஆக்கினானாம் தமிழ் நிலத்தை
அவ்வழி வந்தவர்
ஆண்ட தெம்பரம்பரை
எவ்வழி துறையுமென
கண்டுறையும் மினத்தினர்
சொல்லொன்று கேட்காமல்
அழிவுச் சோதியை மூட்டினர்
இன்று அனலென கொழும்பெங்கும்
கொக்கரித்து மாழுது
உக்கிரையனில் உதித்தது
அக்கிரகாரமாம்
கொழும்புவரை நீளுது
பாணில்லா பஞ்சமாம்
பருப்பும் சோறுமாம்
இனியெம் தேசிய உணவாம்
அதுக்குங் கொஞ்ச
உப்பேனோ
சுப்பற்ற வளவாம்
திண்ணையிலிருந்து
தீம்பாலருந்தி
அருந்ததி அரைச்ச கறி
உறியில மணக்கையில்
மீசையிலது முட்ட
நக்கிய நாவின் சுவை
தக்கெனத் தோன்றுது
அச்சுவை நாளது
மரவள்ளிச் சம்பலும்
மடிதந்த தூக்கமும்
மாட்டுவண்டிக் காதலும்
தூக்கமாய் இருக்குமே
துக்கமென யார் சொன்னது
பாக்களைப்பாடிட
ஆக்களே கேட்டிட
மாக்களும் மலர்ந்திட
மலர்ந்த நாள் போயிற்றே
வில்லங்கம் வந்தேனோ
சொல்லங்கம் போனது
தலையங்கமில்லா
தலையேனோ அலைந்தது
ஆர்க்கெடுத்துரைப்பேன்
எதையென்று மொழிவேன்
பூவேனோ அழகென்றாலும்
அழுகின் அதுவும்தான் மணக்குமே
பூவேனோ அழகென்றாலும்
அழுகின் அதுவும் மணக்கும்தானே.
த. செல்வா