வலிக்காமல் வாழ்க்கையுமில்லை வளம் பெறா
வாழ்வுமில்லை இசைந்திடா பொருமில்லை
சகித்திடா எல்லையுமில்லை
கண்டறிந்த
காகிதமெல்லாம் கவிதையாய் பொலிவான் அவன்
ரசனையின் விசுவாசமாய் தெரிவான்
கேட்டிட கூட்டமும் உண்டு குழம்பிய நெஞ்சமும் உண்டு
வசைபாடும் நெஞ்சமும்
இசை கேட்கும்
தொடமுடியா தேகம் தனில் இசைக்காற்றும்
உரசிச்செல்லும்
மயில்த்தோகையாய் தாலாட்டிடும் நிகரறியா
அன்னை மடியாய்
மழலையும் மண்ணூடல் குதிக்கும்
அழகிக்கினிய ஓவியமாய் – அவன்
நெஞ்சமும் ரணமறியா இன்பத்துகள் வீசும்
பருவத்து பசுமையும்
தேன்சுரக்கும்
இளமையெனும் திருவிளக்கின் ஒளியாய்
அவன் காகிதமும் நவநீதம்
பொழியும்
கனவுகளை தட்டிச்செல்லும் இரவின் மடியில் இனிதான
வசந்தகால பொழுதுகளை வண்ணவடிவமாய்
உயிரூட்டும்
மென் காற்றும் சிறைபிடிக்க வசந்தகால சிணுங்கலுடன்
வலி தந்த வாழ்க்கையும்
வலியறியா ரணங்களும் சொல்வது உண்மை
வர்ணிக்க முடியா வசந்த கால
நினைவுகள்
கேசுதன்