கண மகிழ் பொழுதினில்
தினம் நனையானேன்
கனல் மழை அதனிலும்
அனல் எதிர் கொண்டேன்
எரிகின்ற துயரதை
வெறி கொண்டு தகர்த்தேன்
நாளை நதியாகி விதி நீளின்
மதிப் பொறி விரிப்பேன்
எதுவந்த போதிலும்
என் தவ வாழ்வை தகர்க்கேன்
துகி லுரிந்திட்ட பாஞ்சாலி
சபதங்கள் மீட்பேன்
மீட்பனாய் நின்றெதிர்
ரட்சனாய் சிரிப்பேன்
ராட்சத அலையிலும்
கசியங் காப்பேன்
பூவுடல் ஒன்றிற்காய்
பூகம்ப மாவேன்
இனி புதியதோர் பேரின்பம்
எதுவெனக் கேட்பேன்
மலை கடல் காடென
பெண்ணிடங் காண்பேன்
அன்பெனுங் குடையினில்
அவளையே காப்பேன்
தாய்மையைக் கொண்டவள்
காலடி பணிவேன்
மீறிய தாடகையர்
தாகத்தை தணிக்கேன்
இரவுடன் இனியவள்
இசைந்திடப் படிப்பேன்
படித்ததை எடுத்துநல்
கவிதைகள் வடிப்பேன்
ஆகாயம் பிரித்தொரு
புட்பகம் விடுவேன்
உன் விருப்புடன் கடத்தியே
கலவிகள் தொடுப்பேன்
மாதுநீ மயிலென ஆடிட
இசைப்பேன்
உன் இடைதொட்ட கரமதை
பூவென சுவைப்பேன்
தேன்கிண்ண புதிர்களில்
தாலூட்டி மகிழ்வேன்
தமிழ் சிந்திடும் வாயதில்
பவளத்தை ரசிப்பேன்
இனிவருங் காலம் களிப்பாக
கள் சொட்டு உண்பேன்
நீ தெவிட்டாத திரவமென
உன் மடிமீது முடிவேன்
த.செல்வா
12.21