Wednesday, May 1, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் தாத்தாவுக்கு பேரன் எழுதும் கடிதம் | பா.உதயன்

தாத்தாவுக்கு பேரன் எழுதும் கடிதம் | பா.உதயன்

2 minutes read

அன்பின் தாத்தாவுக்கு
உங்கள் பேரன் எழுதுவது
தாத்தா சுகமா

தாத்தா எங்கள் வீட்டல்
முன்பு போல்
நத்தார் கொண்டாட்டம் இல்லை
நத்தார் தாத்தாவும் வரவில்லை
எங்கள் வீட்டு பூ மரம் பூக்க
மறந்து விட்டது தாத்தா

நோயும் நொடிம்
யுத்தமும் அழிவும்
பஞ்சமும் பசியும்
இனவாதமும் நிறவாதமும்
கொலையும் கொள்ளையும்
வன்முறையுமாய் மனித அவலமுமாய்
இன்னும் தான் முடிவில்லாமல்
தொடர்கிறது தாத்தா
எங்குமே மனிதத்தை
காணவில்லை தாத்தா

காலைச் சூரியன்
எங்கள் கதவடியில் வந்து
கன காலம் ஆகிவிட்டது தாத்தா
நத்தார் தினத்தை இம்முறை
உங்களோடு கொண்டாட முடியுமா தாத்தா
தேவனின் வருகையோடு
எமக்கும் எங்கும் இந்தப் பூமியிலும்
சமாதானம் வருகிறதா பார்ப்போம் தாத்தா

தீயவற்றை பார்க்காதே
தீயவற்றை பேசாதே
தீயவற்றை கேட்காதே

என்று எனக்கு நீங்கள்
அடிக்கடி கூறிய அந்த
உங்களுக்கு பிடித்தமான
காந்தியின் மூன்று குரங்குகளை
நத்தார் பரிசாக கொண்டு வருகிறேன்

தேவன் வருகையை
உங்களோடு பாடி மகிழ்வதில்
எத்தனை சந்தோசம் தாத்தா
தேவனைப் போலவே
உங்களுக்கும் குழந்தைகளின்
சிரிப்பு பிடிக்கும் தாத்தா
எல்லாக் கடவுளுமே சொல்லும் தத்துவம்
அன்பு என்ற ஒன்றே என்று
சொல்லித்தந்தீர்கள் தாத்தா

ஓடி விளையாடு பாப்பா, – 

நீஓய்ந்திருக்க லாகாது பாப்பா,

கூடி விளையாடு பாப்பா, 

– ஒருகுழந்தையை வையாதே பாப்பா.
என்று என் தங்கையை அனைத்து
நீங்கள் பாடியது நினைவு இருக்கிறது
இன்னும் இசைத்தபடியே
இருக்கிறது என் காதுகளில்
கண் போகும் தூரம் வரை
காத்துருக்கிறேன் தாத்தா

தாத்தா உங்கள் கைத்தடி
கதிர் வேட்டி பாட்டுப் பெட்டி
பத்திரமாய் எடுத்து வைத்திருக்கிறேன்
கைத்தடி மட்டும் கன காலமாய்
காத்திருக்கிறது காற்று வேண்ட
உங்களை கூட்டிப் போக

தாத்தா நீங்கள் வளர்த்த
புறாக்கள் இன்னும்
வீடு திரும்பி வரவே இல்லை
உங்களைப் போலவோ
அவைகள் எங்கு பறந்தன
நீங்கள் எங்கு போனீர்கள்
என்றறிய ஆவல் தாத்தா

தாத்தா நானும் நீங்களும் புறாக்களும்
கூடி விளையாடிய நாட்களை
நினைத்துப் பார்க்கிறேன்
பறவைகளோடு உங்கள் பாசம்
பாரதியைப் போல் தாத்தா

கூடு மட்டும் தனியாகக்
காத்திருக்கிறது தாத்தா
அருகில் உங்கள் கதிரையோடும்
நீங்கள் வாசித்து விட்டுப் போனா
புத்தகத்தின் பக்கத்தோடும்

அத்தோடு நீங்கள் எழுதிய
மனிதம் என்ற கவிதை ஒன்று
என்னோடு தான் இருக்கிறது
நீங்கள் விட்டுச் சென்ற
பக்கத்தில் இருந்து நான் தொடர்ந்து
எழுதவிருக்கிறேன் தாத்தா

வந்து விடு தாத்தா
நினைவுகள் தூங்குவதும் இல்லை
உறவுகள் தொலைவதுவும் இல்லை தாத்தா

தாத்தா நீங்கள் கோவில் கச்சேரியில்
பாடிய பாடலும் உங்கள் புல்லாங்குழல் இசையும்
என்னையும் உன்னையும் சேர்த்த
அந்த இசையோடும் அந்தக் காதலோடும்
காத்திருக்கிறேன் தாத்தா.

இப்படிக்கு
உங்கள் அன்புப் பேரன்

பதிலுக்காக இன்னும்
பார்த்திருக்கிறான் பேரன்காரன்
தபால்காரன் மட்டும் வரவே இல்லை.

“தாத்தாக்களுக்கும் பேரப்பிள்ளைகளுக்குமான அன்பு அப்பாக்களின் அன்பை விட மிஞ்சி விடும்.”

பா.உதயன் 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More