அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக பழங்கள் காணப்படுகின்றன.இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைவருக்கும் பல நன்மைகளை அளிக்கின்றன.
மேலும் நாம் அனைவரும் விரும்பும் பழமாக மாதுளம் பழம் காணப்படுகிறது.இப்பழம் பல நன்மைகளை அளித்தலும் இதனால் சில விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மாதுளம் பலத்தால் ஏற்படும் அலர்ஜிகள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. இது அரிப்பு, வீக்கம், தொண்டையில் எரிச்சல்,சுவாசிப்பதில் சிரமம், காதுகளில் வீக்கம்யிற்று வலி மற்றும் படை நோய் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படுத்தும்.
மாதுளை சாப்பிட்ட10 நிமிடத்தில் அரிப்பு தொடங்கினால் மருத்துவரை அணுகுவது நல்லது.சில மருந்துக்களை எடுக்கும் போது மாதுளம்பழத்தை தவிர்ப்பது நல்லது.
உயர் இரத்த அழுத்த மருந்துகள் சாப்பிடுபவர்கள் மாதுளை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரை அணுகுதல் வேண்டும்.நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தால் அதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பிருந்து மாதுளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
கலோரி குறைப்புக்கு சிறந்த மருந்தாகக்காணப்படும் இதுஎடை குறைப்பில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்த பக்க விளைவுகள் அனைத்தும் தனிநபர் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தது என்று ஆய்வுகள் கூறுகிறது.