குளிர் காலங்களில் கூந்தல் வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழை சாறு தடவி சில நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யலாம். இதனால் கூந்தல் மென்மையாக இருக்கும். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆலிவ் எண்ணெய் தடவலாம். இதனால் கூந்தலின் ஈரத்தன்மை வலுவடையும், எண்ணெய் சூடுபடுத்தி தலையில் தேய்த்து குறைந்த நேரம் ஊறவிட்டு குளிக்கலாம்.
அதேபோல், மூலிகை சாறு ஏதேனும் தலையில் தேய்ப்பதாக இருந்தாலும், அவற்றை அதிக நேரம் ஊறவிடக்கூடாது. மூலிகை சாறுகள் பெரும்பாலும் குளிர்ச்சி உடையவை. அவை வெயில் காலங்களுக்கே ஏற்றது. குளிர் காலங்களில் கூந்தலை ப்ரீ ஹேர் விடுவதை தவிர்த்து பின்னுவது நல்லது. இது குளிர்ந்த காற்றில் கூந்தல் வறண்டு போவதை தவிர்க்கும்.