தேவையான பொருட்கள்
முளைவிட்ட கருப்பு கொண்டைக்கடலை – 1 கப்
முளைவிட்ட பச்சைப்பயிறு – அரை கப்
துருவிய பன்னீர் – அரை கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
வெள்ளரி – 1
ப.மிளகாய் – 2
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
பன்னீரை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
நறுக்கி வெங்காயம், தக்காளி, வெள்ளரி, ப.மிளகாய் அனைத்தையும் ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு கலக்கவும்.
அதில் முளைவிட்ட கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு சேர்க்கவும்
அதன் பின்னர் எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், உப்பு, சாட் மசாலாத்தூள், பன்னீர் சேர்த்து கலக்கவும்.
இறுதியாக அதன் மேல் கொத்தமல்லி தழையைத்தூவி பரிமாறவும்.
உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.