Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் நல்லெண்ணெய் குளியல் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்!

நல்லெண்ணெய் குளியல் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்!

2 minutes read

இன்றைய நாகரிக உலகில் நாம் மறந்து விட்ட பாரம்பரிய பழக்கங்களில் ஒன்று நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதாகும். உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக்கூடிய தன்மை கொண்டதால் அதை நல்ல எண்ணெய் என்றே முன்னோர்கள் குறிப்பிட்டார்கள்.

தீபாவளி பண்டிகையன்று அதிகாலையில் உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கம் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது. குளிக்கும் முன்னர் நல்லெண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து சூடுநீரில் குளிப்பது தான் முறையான பழக்கம். அதன் மூலம் உடலின் வெப்பநிலை சீராக பராமரிக்கப்பட்டு நாடி நரம்புகள் வலுவடைந்து ஆரோக்கியம் மேம்படும் என்பது அனுபவ ரீதியான உண்மையாகும்.

*குளியலுக்கான விதிமுறைகள்
வார நாட்களில் ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமையிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையிலும் அதிகாலையில் நல்லெண்ணெய் குளியலை மேற்கொள்ள வேண்டும்.

*எண்ணெய் தேய்க்கும் முறை
சுத்தமான நல்லெண்ணெய்யை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்றாக மசாஜ் செய்வது போல் தேய்க்க வேண்டும். முக்கியமாக தொப்புள், கை, கால் விரல் நகக்கண்களில் நன்றாக படியும் படி அழுத்தி தடவ வேண்டும். அதன் பின்னர் அரை மணிநேரம் ஊற விட்டு அரைத்த வெந்தயத்துடன் சிகைக்காய் கலந்து தேய்த்து சுடுநீரில் குளிக்க வேண்டும்.

*கண்களில் எண்ணெய் விடுதல்
உடலுக்கு எண்ணெய் தேய்த்த பிறகு கண்களிலும் இரு துளிகள் நல்லெண்ணெய்யை விட்டு மேலிருந்து கீழாகவும். இடமிருந்து வலமாகவும் (பிளஸ் வடிவில்) தலா ஐந்து முறை கண்களை சுழற்ற வேண்டும். இதே போல் எக்ஸ் வடிவிலும் சுழற்றிய பின்னர் வட்ட வடிவத்தில் 5 முறை கடிகார சுற்றாகவும் அதற்கு எதிர்ப்புறமாகவும் சுழற்ற வேண்டும்.

*வாய் கொப்பளித்தல்
10 மில்லி நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும். அதை உடனடியாக துப்பி விடாமல் கைகளால் பற்களை துலக்கிய பின்னர் மீண்டும் சில நிமிடங்கள் வாய் கொப்பளிக்க வேண்டும். சிறிது நேரத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு குறைந்து தண்ணீர் போல மாறியவுடன் அதை கீழே துப்பி விட வேண்டும். இதன் மூலம் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

*அருந்தும் முறை
இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்யை சிறிது சிறிதாக வாய்க்குள் உறிஞ்சி உமிழ் நீருடன் நன்றாக கலந்து விழுங்க வேண்டும். அதன் மூலம் மலம் எளிதாக வெளியேறி குடல் சுத்தமாகும்.

*நல்லெண்ணெய் குளியலின் நன்மைகள்
உடலையும் கண்களையும் குளிர்ச்சியடைய செய்து பார்வை திறனை கூர்மையாக்குகிறது. இதில் உள்ள சத்துக்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், சீரான செரிமானத்துக்கும், நீரிழிவுநோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சருமத்தை மிருதுவாக மாற்றுகிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

நன்றி-மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More