நமது உடலை சுத்தம் செய்ய தினமும் குளிக்கின்றோம். நமது முதல் அடுக்கு இதுதான், கண்ணுக்கு தெரியும் அன்னமய கோசம். தினமும் காலை மாலை இருவேளையும் குளிக்க வேண்டும். இதனால் நமது அன்னமய கோசம் சுத்தமடைகின்றது.
விரிப்பில் குப்புறபடுக்கவும். ஒவ்வொரு கையால் காலை மடக்கி கணுக்காலை பிடிக்கவும். மெதுவாக மூச்சை இழுத்து தலையை மேல்நோக்கி பார்க்கவும். (படத்தை பார்க்கவும்) பத்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக தரையில் படுக்கவும். மீண்டும் இதேபோல் பயிற்சி செய்யவும். மூன்று முறைகள் பயிற்சி செய்யவும். காலை மாலை இரண்டு வேளை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.
பலன்கள்
வயிற்றுப் பகுதி நன்கு அமுக்கப்படுகின்றன, உடலை ஒரு வில் போல் வளைக்கின்றோம். உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் நன்கு சக்தி பெற்று இயங்கும். சிறுகுடல், பெருங்குடல், கணையம், சிறுநீரகம், சிறுநீரகப்பை, இதயம், நுரையீரல், கல்லீரல், முதுகுத்தண்டு, தைராய்டு, பாரா தைராய்டு, கண்கள், மூக்கு அனைத்தும் சிறப்பாக இயங்குகின்றது. இந்த உறுப்புகள் நன்கு பிராண சக்தி பெற்று இயங்குவதால் மூட்டுவலி, கழுத்துவலி, இதயவலி, சுகர், ரத்த அழுத்தம், முதுகுவலி போன்ற பிரச்சினைகள் வராமல் வளமாக வாழலாம்.
இந்த ஆசனத்தை உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்தம், மூட்டு வீக்கம் உள்ளவர்கள் செய்ய வேண்டாம். உடல் வளையும் தன்மை உள்ளவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் உடல் ஆரோக்கியம் நம்மிடம் என்றும் நிலைத்திட பயிற்சி செய்யுங்கள்.
நன்றி | மாலை மலர்