கிரீன் டீயில் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் மேம்படுத்தும் ஏராளமான பலன்கள் இருக்கின்றன, இங்கே சில முக்கியமான நற்பலன்கள் தரப்பட்டுள்ளன.
இரத்த அழுத்தத்தை ஒழுங்கு செய்கிறது
ஆஞ்சியோடென்சின் மாற்று என்சைம் (கிசிணி) என்பதால் இரத்த அழுத்தம் உருவாக்கப்படுகிறது.
இது சிறுநீரகங்களில் சுரக்கப்படுகிறது. இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை இந்த என்சமை தணிக்கும் வகையில் செயல்படுகின்றன.
இந்த என்சைமின் செயல்பாட்டைத் தடுத்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. கிரீன் டீ என்பது ஒரு இயற்கையான கிசினி தணிப்பியாகும், மேலும் இதைத் தொடர்ந்து குடித்து வரும்போது, இரத்த அழுத்த அளவுகள் தொடர்ந்து சீராகி வருகின்றன.
ஆய்வுகளின்படி, ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு கப் கிரீன் டீ அருந்துவதால், ரத்த அழுத்தம் சீரடைகிறது.
ஒரு ஆய்வின்படி, கிரீன் டீ அருந்துவதால் ஏற்படும் குறைந்த ரத்த அழுத்தம், இதய ரத்த நாள நோய்களின் அபாயத்தையும், பக்கவாதத்தின் அபாயத்தையும் குறைப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இதயத்தின் நலம் மேம்படும்
மேலே குறிப்பிட்டுள்ளபடி, தொடர்ந்து முறையாக கிரீன் டீ அருந்தி வருவதால், இதய நாள இதய நோய்களின் அபாயம் குறைவடையும்.
கிரீன் டீ இதய நோய்களுடன் நேரடியாகத் தொடர்புடைய கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளையும் குறைக்கின்றது. அதே நேரத்தில் நல்ல கொலஸ்ட்ராலை பாதிப்பதில்லை.
ரத்தத்தின் ஆன்டி ஆக்சிடெண்ட் அளவை அதிகரிப்பதன் மூலம், ரியாக்டிவ் ஆக்சிஜன் இதயத்தைச் சென்று சேர்வதைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கின்றன.
ஒரு ஆய்வின் அடிப்படையில், கிரீன் டீ அருந்துபவர்களுக்கு, கார்டியோவாஸ்குலார் நோய்கள் ஏற்படுவதற்கு 31 சதவீதம் குறைந்த வாய்ப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கிரீன் டீயில் உள்ள கேட்சின்கள் அத்திரோஸ்கெலரோசிஸ் அல்லது ரத்த நாளங்கள் இறுக்கமடைவதைத் தடுக்கின்றன, இப்படி இறுக்கமடைவதுதான் இதய நோய்களின் முக்கிய காரணமாகும்.
நன்றி பெமினா வீட்டு மருத்துவம்