Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் உடல் உஷ்ணத்தை குறைக்கும் முத்திரைகள்

உடல் உஷ்ணத்தை குறைக்கும் முத்திரைகள்

2 minutes read

மே மாதம் அக்னி நட்சத்திரம் வரும் பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாகிருக்கும். இந்த காலகட்டங்களில் நம் உடலுக்கு எந்த பிரச்சினைகளும் வராமல் தடுக்கும் முத்திரைகளை பார்க்கலாம்.

முத்திரைகள்: முத்திரைகள் மூலம் நம் உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தாமல் வாழ முடியும்.

பிராண முத்திரை: தரையில் விரிப்பு விரித்து கிழக்கு முகமாக நிமிர்ந்து அமரவும்.முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற் காலியில் அமரவும்.கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும்.பின் மோதிர விரல் சுண்டு விரல் மத்தியில் கட்டை விரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்கவும்.இரு கைகளிலும் செய்யவும்.இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் காலைமாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

பலன்கள்:வெயில் காலத்தில் கண்களில் கட்டிகள், கண் சம்மந்தமான வியாதி வராமல் பாதுகாக்கப்படுகின்றது, கண் நரம்புகள் நன்றாக இயங்குகின்றது. லிவருக்கு நல்ல சக்தி ஓட்டம் கிடைக்கின்றது. உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும்.சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கலாம்.உடலில் பிராண சக்தி எல்லா உறுப்புகளுக்கும் கிடைக்கும்.கால் பாத வீக்கம் பாத எரிச்சல் வராமல் வாழலாம்.

மலச்சிக்கல் நீக்கும் சுஜி முத்திரை: வெயில் காலங்களில் நிறைய நபர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும்.அதிலிருந்து விடுபட சுஜி முத்திரையை செய்யவும்.

விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும்.பின் சுண்டு விரல், மோதிர விரல், நடு விரலை மடக்கி உள்ளங்கையில் வைத்து கட்டை விரலை மோதிரவிரலின் நடுவில் வைத்து ஆள்காட்டி விரலை படத்தில் உள்ளது போல் வலது தோள்பட்டை இடது தோள்பட்டை அருகில் சற்று சாய்த்து வைக்கவும்.2 நிமிடங்கள் காலை, மதியம், மாலை சாப்பிடுமுன்பயிற்சி செய்யவும்.
மலச்சிக்கல் நீங்கும். உடல் உஷ்ணம் தணியும்.உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும்,வெயில் காலத்தில் இந்த முத்திரை ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது.

வயிற்றுப்போக்கு வராமல் வாழ ஜலோதர நாசக் முத்திரை: வெயில் காலத்தில் நிறைய நபர் களுக்கு வயி ற்றுப்போக்கு (பேதி) ஏற்படும்.அத னால் உடலில் நீர் சக்தி குறைந்து உடல் சோர்வு ஏற்படும்.அதற்கு இந்த ஜலோதர நாசக் முத்திரையை இரண்டு நிமிடங்கள் செய்யுங்கள்.நல்ல பலன் கிடைக்கும்.

விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.முது கெலும்பு நேராக இருக்கட்டும்.இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து தியானிக்கவும்.பின் சுண்டு விரலை மடக்கி அதன் நகத்தின் மேல் மையத்தில் கட்டை விரலை வைத்து லேசாக ஒரு அழுத்தம் கொடுக்கவும்.இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள், காலை மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும். இந்த முத்திரையை வயிற்றுப்போக்கு இருந்தால் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.மற்ற சமயங்களில் காலை ஒரு வேளை அல்லது மாலை ஒரு வேளை இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்தால் போதுமானது. இந்த முத்திரை மூலம் வெயில் காலத்தில் வயிற்றுப்போக்கு வராமல் தடுக்க முடியும்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More