இந்தியாவில் உள்ள ஒரு மனிதர் தினசரி உணவாக செங்கல் கற்களை சாப்பிடும் பழக்கத்தை கொண்டவராக இருக்கிறார். Pயமமசையிpய ர்ரயெபரனெi என்ற பெயர் கொண்ட அந்த நபர் தினமும் செங்கல் கற்களை திண்பதற்கு அடிமையாகி உள்ளதால் அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார்.
இதுகுறித்து அவர் டீயசஉசழகவ வுஏ என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “சிறுவயதில் இருந்தே நான் மண்ணை தின்று வருவதாகவும், நாளடைவில் செங்கல் கற்களை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன் என்றும் கூறியுள்ளார். இது எனது பொழுது போக்காகவே மாறிவிட்டது என்றும் இதை என்னால் நிறுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
எனது தாயார் மிகவும் ருசியான சிக்கன் உணவுகளை தயாரித்து வைத்திருந்தாலும், அதை நான் சாப்பிட மாட்டேன். நான் மண்ணும், செங்கல்லும் எங்கே இருக்கிறதோ அந்த இடத்தை தேடித்தான் போவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
30 வயதாகும் Pயமமசையிpய ர்ரயெபரனெi, தான் 10 வயதாக இருக்கும்போதே மணலையும், செங்கல் கற்களையும் சாப்பிடும் பழக்கத்தை ஆரம்பித்துவிட்டதாக கூறுகிறார். நாள் ஒன்றுக்கு ஒரு செங்கல்லும், மூன்று கிலோ மணலும் இவர் சாப்பிடுகிறார்.
தற்போது இவர் Piஉய என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பின்பு மீண்டும் தனது வழக்கமான உணவை சாப்பிட போவதாக கூறியுள்ளார்
கூடியவிரைவில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள் முன்னிலையில் செங்கல் கற்களையும், மணலையும் சாப்பிட்டு அசத்தப்போவதாகவும் இவர் கூறியுள்ளார்.