ஜப்பானின் கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் உலகில் முதல் முறையாக தானே சுத்தம் செய்துகொள்ளும் காரை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும் போது
இந்த கார் நானோ பெயிண்ட் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும். மழை காலத்திலோ, அல்லது கிராமப்புற சாலைகளில் குண்டு குழியான சாலைகளில் சென்று வரும் கார் அசுத்தமாவது இயல்பு அந்த நேரத்தில் காரை சாலையில் நிறுத்தியதும் தானே தண்ணீர் பீய்ச்சி கழுவிக்கொள்ளும்,மேலும் அல்டார் எவர் ட்ரை எனப்படும் உலர்ந்த தொழில்நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இதன் விலை சுமார் 750 டாலர் எனவும் தெரிவித்துள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பில் இது வெறும் 45, ஆயிரம் ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.