அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் இளம் விஞ்ஞானி விருதை வென்று சாதனை படைத்து உள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் மின்சாரத்தை சார்ந்துள்ள நிலையில், மின் பொருட்கள் உபயோகத்தால் ஏற்படும் காற்று தூய்மைக்கேட்டை கருத்தில் கொண்டு மின் பாதுகாப்பு சாதனத்தை சகீல் தோஷி என்ற அமெரிக்க வாழ் இந்திய மாணவர் கண்டுபிடித்து சாதனை படைத்து இருக்கிறார்.
அமெரிக்காவின் பித்ஸ்பர்க் பகுதியில் தங்கி இருக்கும் அவர், இந்த சாதனைக்காக ‘அமெரிக்காவின் உயரிய இளம் விஞ்ஞானி’ என்ற புத்தாக்க விருதையும் 25 ஆயிரம் அமெரிக்க டாலரையும் வென்று உள்ளார். இந்த விருதுக்கான இறுதிச்சுற்றில் மொத்தம் 9 பேர் போட்டியிட்டனர். இறுதியில், சகீல் தோசிக்கு இந்த விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.