கனடா நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் 2 பேர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்து கண்மூடித் தனமாகச் சுடத் தொடங்கினர்.
தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து நாடாளுமன்றம் செல்லும் சாலைகள் மூடப்பட்டன. நாடாளுமன்ற வளாகம் சீல் வைக்கப்பட்டது.
தாக்குதல் குறித்த விவரம் தெரிவிக்கப் பட்டவுடன், கனடா நாட்டு பிரதமர் ஹார்ப்பர் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்குச் சென்றார். மேலும், எம்.பி.க்கள் அனைவரும் பத்திரமாக வேறு ஒரு கட்டடத்துக்குச் சென்றனர்.
இந்நிலையில், கனடா நாட்டுத் தலைநகர் ஒட்டாவோவில் உள்ள போர் நினைவுச் சின்னத்திலும் ஒரு தீவிரவாதி தாக்குதல் நடத்தியுள்ளான். இதில் காவல் துறையைச் சேர்ந்த வீரர் ஒருவர் சுடப்பட்டுள்ளார் என்று கனடா நாட்டு போலீ’சார் தெரிவித்துள்ளனர்.