கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை மீண்டும் சந்திக்கக் கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் எச்சரித்துள்ளார். இதில் இருந்து தப்பிக்க உலக நாடுகளுக்கு வழியையும் அவர் காட்டியுள்ளார். அது இந்தியாவிலும் சீனாவிலும் முதலீடு செய்வதுதான்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பல்வேறு உலக நாட்டு தலைவர்களிடம் பேசியபோது, மீண்டும் பொருளாதார மந்தநிலையை உலக நாடுகள் சந்திக்கக் கூடிய சூழ்நிலை உருவாகி வருவது தெரிய வந்துள்ளது என்று நேற்று முன்தினம் மாலையில் கேமரூன் தெரிவித்தார். அவர் பேசிய சில மணி நேரத்தில், ஜப்பானின் பொருளாதாரம் கடுமையாக சரிந்து,