ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஆட்பதிவுத்திணைக்களம், மற்றும் தேர்தல் திணைக்களம் இரண்டும் இணைந்து தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான இலவச நடமாடும் சேவை இன்று 18-12-2014 வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகாவித்தியாலயத்தில் நடைபெற்று வருகிறது.
தேசிய அடையாள அட்டையைத் தொலைத்தவர்கள், அடையாள அட்டை இல்லாதவர்கள், மற்றும் சேதமடைந்த அடையாள அட்டையுடையோர் இந்த இலவச நடமாடும் சேவையைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
புல கிராமங்களில் இருந்தும் 300 வரையான மக்கள் இந்த நடமாடும் சேவையைப் பயன்படுத்துவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
0