“வவுனியாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக செட்டிகுளத்திலுள்ள மீடியாபாம், கந்தசாமி நகர், பாவற்குளம் படிவம் நான்கு மற்றும் மெனிக்பாம் ஆகிய பகுதி மக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செட்டிகுளம் – பூவரசன்குளம் ஊடான போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்றும், நேற்று முன்தினமும் பெய்த கடும் மழை காரணமாக தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் அதிகரித்திருக்கிறது. இதனால் செட்டிகுளம் – பூவரசன்குளம் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது
0