ஆசிய நாடுகளில் ஆறு நாள் சுற்றுப்பயணத்தை போப் பிரான்சிஸ் தொடங்கியுள்ளார். தனது பயணத்தின் முதல் கட்டமாக இலங்கையில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்தார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நாட்டிற்கு முதல் முறையாக போப் வருகை தருவதையொட்டி, இலங்கை அரசு சுமார் 700 கைதிகளை விடுதலை செய்துள்ளது.
நாடு முழுவதும் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள், 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் என 692 கைதிகளை விடுதலை செய்ய புதிய அதிபர் மைத்திபாலா சிறிசேனா உத்தரவிட்டதையடுத்து, அவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
இதேபோல் சிறையில் இருக்கும் பிற கைதிகளின் தண்டனைக் காலத்தில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு வாரம் கணக்கிடப்பட்டு தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.