Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பஸ் விபத்தில் ஒரு மாணவன் பலி ஒருவர் படுகாயம் -வவுனியாபஸ் விபத்தில் ஒரு மாணவன் பலி ஒருவர் படுகாயம் -வவுனியா

பஸ் விபத்தில் ஒரு மாணவன் பலி ஒருவர் படுகாயம் -வவுனியாபஸ் விபத்தில் ஒரு மாணவன் பலி ஒருவர் படுகாயம் -வவுனியா

0 minutes read

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்துக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் அந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஒரு மாணவன்; இரவு 7.00 மணியளவில் பலியானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பலியானவர் 2016 ஆண்டு உயர்தர விஞ்ஞானப்பிரிவில் பயிலும் சற்குணதாஸ் துலக்சன் வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த விபத்து  நேற்று  நண்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது. விழையாட்டுப்போட்டியில் பங்குபற்றியபின் பாடசாலையில் இருந்து ஸ்கூட்டி வகை மோட்டார் சைக்கிளில் ஏ – 9 கண்டி வீதிக்கு சென்ற மாணவர்களை கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பஸ் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்தவர் 2016 ஆண்டு உயர்தர விஞ்ஞானப்பிரிவில் பயிலும் சுப்பிரமணியம் கிருஷாந்தன் வயது 18 என தெரிவிக்கப்படுகிறதுஇவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More