Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நல்லாட்சி, மனித உரிமை விவகாரங்களில் புதிய அரசுக்கு உதவத் தயார் | அமெரிக்காவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் நல்லாட்சி, மனித உரிமை விவகாரங்களில் புதிய அரசுக்கு உதவத் தயார் | அமெரிக்காவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால்

நல்லாட்சி, மனித உரிமை விவகாரங்களில் புதிய அரசுக்கு உதவத் தயார் | அமெரிக்காவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் நல்லாட்சி, மனித உரிமை விவகாரங்களில் புதிய அரசுக்கு உதவத் தயார் | அமெரிக்காவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால்

1 minutes read

இலங்கையில் நல்லாட்சி, மனித உரிமை விவகாரங்களில் புதிய அரசுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.

அமெரிக்காவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ளார். இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர அவரை திங்கள்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதையடுத்து, நிஷா தேசாய் பிஸ்வால் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கையின் புதிய அரசுடன் நல்லுறவு ஏற்படுத்தவே தான் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கையின் வளர்ச்சிக்கு உதவும் உற்ற துணையாக அமெரிக்கா திகழும் எனவும் நல்லாட்சி, மனித உரிமை விவகாரங்களில் உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர உடனிருந்தார். அவர் கூறுகையில், பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவுடன் நெருங்கிச் செயல்பட இலங்கை விரும்புவதாகக் கூறினார்.

முன்னாள் அதிபர் ராஜபட்சவின் ஆட்சியின்போது, இலங்கை-அமெரிக்க உறவு மோசமடைந்தது.

மனித உரிமை மீறல் தொடர்பாக, 2012-ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு எதிராக 3 தீர்மானங்களை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது என்பது நினைவுகூரத் தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More