0
இலங்கையின் 67 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று காலை (04.02.2015) கொண்டாடப்பட்டது.
வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல கரிச்சந்திர தலைமையில் காலை 9.00 மணிக்கு தேசியக்கொடி ஏற்றும் வைபவத்துடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. தேசிய கீதம் சிங்களம் மற்றும தமிழில் உரைக்கப்பட்டதுடன் மாவட்ட செயலாளர் பந்துல கரிச்சந்திரவினால் உரையும் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.