ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகாஹராம் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் நைஜீரியாவின் பக்கத்து நாடுகளிலும் புகுந்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்த நிலையில் கேமரூன் நாட்டுக்குள் புகுந்த தீவிரவாதிகள் பயணிகள் பஸ் ஒன்றை கடத்திச் சென்றனர். பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். வடக்கு கேமரூனில் உள்ள உள்ளூர் சந்தைக்கு சென்றுவிட்டு பயணிகள் பஸ்சில் ஏறி வந்தனர். அப்போது அந்த பஸ்சை வழிமறித்த தீவிரவாதிகள் பஸ்சுடன் கடத்திச் சென்றனர்.
நைஜீரியா எல்லையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் அந்த பஸ் அனாதையாக நின்றது. ஆனால் பயணிகள் யாரையும் காணவில்லை. அவர்களை தீவிரவாதிகள் நைஜீரியா நாட்டுக்குள் கடத்தி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களுடைய கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.