கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரின் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் 2 பெண் குழந்தைகள் பிறந்தன. இன்குபேட்டரில் வைத்து பராமரித்த போது குழந்தைகள் மாறிவிட்டன.
அதில் ஷோபி செர்ரேன் என்ற பெண்ணுக்கு பிறந்த மனோன் ஷெரேன் என்ற குழந்தை வேறு ஒரு பெற்றோருக்கு மாறியது. தன்னிடம் வளர்ந்த வேற பெண் குழந்தையின் கருப்பு நிறம் மற்றும் தலை முடியை வைத்து சந்தேகம் அடைந்த ஷோபி தம்பதி டி.என்.ஏ. பரிசோதனையின் மூலம் குழந்தை மாறியதை கண்டுபிடித்தனர்.
10 ஆண்டுகளுக்கு பிறகு இது தெரிய வந்தது. அதை தொடர்ந்து தனது மகள் மனோன் செர்ரோனை கஷ்டப்பட்டு அவர்கள் கண்டு பிடித்தனர். அது குறித்து கிரேசே நகர கோர்ட்டில் ஆஸ்பத்திரியின் மீது இரு பெண் குழந்தைகளின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை 10 ஆண்டுகளாக நடந்தது. தற்போது மாறிய குழந்தைகளுக்கு 20 வயது ஆகிறது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
அதில் மாற்றி வழங்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் ரூ.13 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இது பெற்றோர் கேட்ட நஷ்டஈடு தொகையை விட 6 மடங்கு குறைவாகும் அதை குழந்தைகளின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர்.