குரோஷியா நாட்டின் முதல் பெண் அதிபராக கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.
கடந்த ஜனவரி மாதம் அந்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் இவோ ஜோசிபோவிக்கை வீழ்த்தி அவர் வெற்றி பெற்றார்.
ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடான குரோசியாவில் கடும் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள கொலிண்டா கிராபர், “குரோஷியாவை வளமான நாடாக மாற்றுவேன்’ என்று உறுதியளித்தார்.
பதவியேற்பு விழாவில் அல்பேனியா, போஸ்னியா – ஹெர்சகொவினா, ஹங்கேரி, கொசோவா, மேசிடோனியா, மான்டிநீக்ரோ, ஸ்லோவேக்கியா, ஸ்லோவேனியா, செர்பியா உள்ளிட்ட நாடுகளின் அதிபர்கள் பங்கேற்றனர்.