பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஷுபர்கான் (28). இவர் இங்கிலாந்தில் தங்கி படித்து வந்தார். அங்கேயே நிரந்தரமாக தங்க முடிவு செய்தார். ஆனால் இவரது மாணவர் விசா காலம் முடிந்து விட்டது. எனவே இங்கிலாந்து குடியுரிமை பெற்ற ஒரு பெண்ணை போலியாக திருமணம் செய்து கொண்டு தங்க திட்டமிட்டார்.
அதற்காக லண்டனைச் சேர்ந்த திருமண புரோக்கர் காலிப் தத்கான் (48) என்பவரை பிடித்தார். அவர் ஹாங்கேரியை சேர்ந்த பியடா ஷிலாகி என்ற பெண்ணை மணமகளாக ஏற்பாடு செய்தார்.
திருமணம் நடந்தது போன்று போலியாக செட்அப் செய்தனர். உடனே திருமணத்தை பதிவு செய்ய அலுவலகம் சென்றனர். அங்கு மணமகன் ஷுபையர்கானிடம் மணமகளின் பெயரை கூறும்படி அதிகாரி கூறினார்.
ஆனால் அவருக்கு தனது மனைவியின் பெயர் சட்டென மறந்து விட்டது. இதனால் போலியாக திருமணம் செய்த அவர் சரியாக மாட்டிக் கொண்டார்.
எனவே மணமகன் ஷுபையர்கான், மணமகள் பியபா ஷிலானி, புரோக்கர் காலிப் தத்கான் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு ஷுபையர்கான், புரோக்கர் காலிப்தத்கான் ஆகியோருக்கு தலா 20 மாதங்கள் ஜெயில் தண்டனையும், பியடா ஷிலாகிக்கு 17 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்தது