Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர் கார் குண்டு தாக்குதல்லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர் கார் குண்டு தாக்குதல்

லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர் கார் குண்டு தாக்குதல்லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர் கார் குண்டு தாக்குதல்

1 minutes read

லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் கார் குண்டு தாக்குதலில் 40 பேர் உடல் சிதறி பலியாகினர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு லிபியாவில் மக்கள் புரட்சிக்கு பிறகு அதிபர் மும்மர் கடாபி பதவி விலகினார். அதை தொடர்ந்து அங்கு குழப்பநிலை நீடித்து வருகிறது. இங்கு 2 அரசுகள் இயங்கி வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

நேற்று கிழக்கு லிபியாவில் உள்ள கியூப்பா நகரில் பெட்ரோல் நிலையம் மற்றும் டவுன் கவுன்சில் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து 3 கார் குண்டு தாக்குதல்களை நடத்தினர்.

இந்த தாக்குதலில் 40 பேர் உடல் சிதறி பலியாகினர். 70–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லிபியாவில் தீவிரவாதிகள் அடிக்கடி கார் குண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். பொதுமக்களை விட போலீஸ் மற்றும் ராணுவ மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More