தற்போது முப்பத்தோரு ஆண்டுகளுக்குப் பின்பு எச்.ஐ.வி. வைரஸுக்கு தடுப்பூசியையும் ராபர்ட் காலோவின் குழு கண்டறிந்துள்ளது. ஏற்கனவே பலமுறை குரங்குகள் மீது பரிசோதிக்கப்பட்ட இது, மனிதர்கள் மீது பயன்படுத்த விரும்புவதாக இவர் தெரிவித்துள்ளார்.
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியளிக்கும், டி-செல்களை இந்த வைரஸ் தாக்குவதற்கு முன்னர் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்பட வேண்டும். மனிதர்களின் மீது இந்த முதற்கட்ட சோதனை சரியான பலனைத் தந்தால், இதற்கு அடுத்தபடியாக எச்.ஐ.வி. வைரஸின் மீது இந்த தடுப்பூசியின் தாக்கம் எவ்வாறு இருக்கும்? என்பது தொடர்பான ஆராய்ச்சியில் இறங்கப்போவதாக ராபர்ட் காலோ தெரிவித்தார்.
சுமார் பதினைந்து ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சி மூலம் இந்த தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.