Thursday, May 9, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இரணைமடு குளத்தில் 99 பானைகள் வைத்து பொங்கல்!

இரணைமடு குளத்தில் 99 பானைகள் வைத்து பொங்கல்!

1 minutes read

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 99 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 99 பானைகளில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றன. நேற்று வியாழக்கிழமை (17.01.2019) குறித்த நிகழ்வு இடம்பெற்றன.

இரணைமடுக்குளம் நீர்ப்பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு 99 ஆண்டினை கொண்டாடும் வகையில் கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த பொங்கல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொங்கல் நிகழ்வின் பிரதான பொங்கல் பானையினை வடமாகாண சபை முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் வைத்தனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More