நாம் தமிழர் கட்சியினால் 10ம் ஆண்டு தமிழினப்படுகொலை நினைவேந்தல்.
சிங்களப் பயங்கரவாத அரசு, நம் தாய்நிலம் தமிழீழத்தைக் கொலைக்களமாக்கி நம் இனமக்களைக் கொன்றுகுவித்தது.
அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் பிள்ளைகள் இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதியைக் கேட்டு 10 ஆண்டுகள் நிறைவுற்றும் இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிற துயரம் தொடர்கிறது.
மே 18, இனப்படுகொலை நாளின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 18-05-2019 சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள தலைமையகத்தில் சுடர் வணக்கம் மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.