Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய மேலும் ஐவர் மலேசியாவில் கைது 

விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய மேலும் ஐவர் மலேசியாவில் கைது 

1 minutes read

விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மேலும் 5 பேர் பாதுகாப்பு குற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி மலாக்காவில் இரண்டு பேரையும் பினாங்கில் இரண்டு மற்றும் சிலாங்கூரில் ஒரு சந்தேக நபரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவு நேற்று (சனிக்கிழமை) கைது செய்துள்ளது.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக இரு அரசியல்வாதிகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் இன்று நடைபெறும் ஊடக சந்திப்பில் அறிவிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை கடந்த வியாழக்கிழமை இரு அரசியல்வாதிகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More