Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கூட்டமைப்புடன் விரைவில் பேச்சுவார்த்தை: மஹிந்த

கூட்டமைப்புடன் விரைவில் பேச்சுவார்த்தை: மஹிந்த

1 minutes read

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டு முதலாவது தடவையாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஷங்க்ரிலா நட்சத்திர ஹாட்டலில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்முடன் இதுவரை பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வரவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அனைத்து தரப்பினருடைய தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் அவர்களது கொள்கைள் அறிவிக்கப்பட்ட பின்னரே ஆதரவு தொடர்பாக தீர்மானிப்போம் என கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More