வவுனியா பிராந்திய பொலிஸ் நிலையம் புதிய ஜனாதிபதி கோத்தபாயவின் வருகையை அடுத்து காவல்துறையாக மாற்றம் அடைந்துள்ளது.

புதிய ஜனாதிபதி கோத்தாபய தமிழ் பகுதிகளில் தமிழ் மொழி நடைமுறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளதையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பெயர்ப்பலகையில் இவ்வாறு ‘காவல்துறை’யாக மாற்றம் அமைந்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

யுத்தம் இடம்பெற்று வந்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதிகளில் இயங்கி வந்த பொலிஸ் நிலையங்களில் காவல்துறை என்ற தமிழ் மொழியைப் பெயர்ப்பலகை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.