பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அமெரிக்கா அதிபரின் அமைதித் திட்டத்தை நிராகரிப்பதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நடந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அதில் அவர் பேசும்போது, “நான் இங்கு வந்திருப்பது பாலஸ்தீனம் – இஸ்ரேல் தொடர்பான அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தை பாலஸ்தீனம் நிராகரித்துவிட்டது என்பதைக் கூறுவதற்குத்தான். இந்தத் திட்டம் பாலஸ்தீனியர்களின் உரிமைகளின் நியாயத்தன்மையையும், சுயநிர்ணய உரிமையையும் ரத்து செய்கிறது. இது சட்டவிரோதமான குடியேற்றங்களை நியாயப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.