Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கையை நீக்கிய ஐரோப்பிய ஆணைக்குழு

இலங்கையை நீக்கிய ஐரோப்பிய ஆணைக்குழு

1 minutes read

மூன்றாம் உலக நாடுகள் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கியது ஐரோப்பிய ஆணைக்குழு.

ஐரோப்பிய ஆணைக்குழுவானது 2020 மே 07ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் உபாய ரீதியான குறைபாடுகளுடன்கூடிய உயர் இடர்நேர்வுமிக்க மூன்றாம் நிலை நாடுகளைக் கொண்ட அதன் பட்டியலிலிருந்து இலங்கையினை நீக்கியுள்ளது.

இதேவேளை, இலங்­கை­யா­னது ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பண மோசடி மற்றும் தீவி­ர­வா­தி­க­ளுக்கு நிதி­ வ­ச­தி­ய­ளிக்­கின்­றமை தொடர்பில் அதி உயர் அபாய நிலை­யி­லுள்ள மூன்றாம் உலக நாடுகள் பட்­டி­யலில் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 2018 இல் ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கை அதிக ஆபத்துள்ள மூன்றாம் நாடுகளைக் கொண்ட பட்டியலிடப்பட்டது, அதன் பின்னர் இலங்கை நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) அதன் இணக்க ஆவணத்தில் மூலோபாய AML / CFT குறைபாடுகளைக் கொண்ட அதிகார வரம்பாக அடையாளம் காணப்பட்டது. அக்டோபர் 2017 இல் “சாம்பல் பட்டியல்” என அடையாளம் காணப்பட்டது.

இவ்வாறு பட்டியலிடப்பட்டதும், அடையாளம் காணப்பட்ட மூலோபாய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு கால அளவிலான செயல் திட்டம் இலங்கைக்கு ஒதுக்கப்பட்டது.

நிதியியல் நடவடிக்கைச் செயலணியால் பட்டியலிடப்பட்டதிலிருந்து, நிதி புலனாய்வு பிரிவு (FIU) மற்றும் பங்குதாரர்களுடன் சேர்ந்து, குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிதியியல் நடவடிக்கைச் செயலணி செயல் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தொடர்ச்சியான பயனுள்ள மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதன்படி, நிதியியல் நடவடிக்கைச் செயலணியானது 2019 ஒக்டோபர் 13 – 18 வரை பாரிஸ் நகரில் நடைபெற்ற அதன் முழுநிறைவான அமர்வில் அதன் இணங்குவித்தல் அட்டவணையிலிருந்து சாம்பல் நிறப்பட்டியல் எனவும் அறியப்படுகின்ற இலங்கையினை நீக்கியது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More