இராணுவத்தினர் மீது கல் எறிந்து விட்டு இரு இளைஞர்கள் தப்பிக்க முயன்ற போது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் வல்லைவெளி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் வரணி பகுதியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது 23) என்ற இளைஞரே படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவருகிறது.
வல்லைவெளி இராணுவ காவலரணில் கடமையில் நின்ற இராணுவத்தினர் மீது, மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் கல்லால் எறிந்து விட்டு தப்பிக்க முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது.
அந்த வேளையில், இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.