அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தின் புனித லுயிஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இந்த கேளிக்கை நிகழ்ச்சியில் 19 வயது இளைஞன் சக மாணவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.