ஜப்பான் – ஹிரோஷிமா நகரில் ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அந்நாட்டு இராணுவ வீரர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளார்.
இது தொடர்பிலான புகைப்படத்தை, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
அதேவேளை, ஜி-7 உச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்தும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் அமெரிக்க ஜனாதிபதி பைடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்றும் வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறவுள்ள குறித்த உச்சி மாநாட்டில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 7 நாடுகளும், ரஷியாவுக்கு எதிரான புதிய தடைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், அதிகரித்து வரும் சீனாவின் அதிகாரம் மற்றும் செல்வாக்கு ஆகியவை பற்றியும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மாநாட்டில், ஆன்லைன் வழியே உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் கலந்துகொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.