இலங்கைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் பரிசாக அனுப்பட்ட யானையை தாய்லாந்து மீண்டும் திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது.
29 வயது முத்து ராஜா என்ற அந்த யானை தாய்லாந்தில் பிறந்தபோது சக் சுரின் என்று பெயரிடப்பட்டதுடன், அது கடந்த 2001ஆம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது.
எனினும் அந்த யானை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து, யானையைத் தங்களிடமே ஒப்படைக்குமாறு தாய்லாந்து கேட்டது.
இதையடுத்து, 4,000 கிலோகிராம் எடையிலான அந்த யானை இன்று(02) காலை கொழும்பிலிருந்து 7.40 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் தாய்லாந்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
அதற்காக 700,000 டொலர் செலவிடப்பட்டதாகத் தாய்லந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.