அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் புகார் அளித்தனர்.
அதன்பேரில் பொலிஸார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு குளிர்சாதன பெட்டியில் இறந்துபோன 5 நாயின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் 55 நாய்கள் அந்த வீட்டில் மோசமான நிலையில் இருந்தன. அவற்றை பொலிஸார் உடனடியாக மீட்டு விலங்குகள் நல காப்பகத்தில் கொண்டு போய் விட்டனர்.
இதனையடுத்து அந்த வீட்டின் உரிமையாளரான மெக்லாலினை (வயது 48) பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.