Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மார்ச் 4ஆம் திகதி ஆரம்பமாகிறது மேஜர் டி 20 தொடர்!

மார்ச் 4ஆம் திகதி ஆரம்பமாகிறது மேஜர் டி 20 தொடர்!

1 minutes read

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபையினால் ஒழுங்கு செய்யப்படவுள்ள மேஜர் கிளப் இருபதுக்கு இருபது தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கையின் முன்னணி 26 கழகங்களை  நடாத்தப்படவுள்ள இந்த தொடர் 4 குழுக்களாக இடம்பெறவுள்ளதோடு ஒவ்வொரு குழுவிலும் முதலிரு இடங்களைப்பெறும் அணிகள் நேரடியாக காலிறுதிச்சுற்றுக்கு தெரிவாகும்.

இந்த தொடரின் குழுநிலைப் போட்டிகள் மார்ச் மாதம் 4ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதோடு காலிறுதிப்போட்டிகள் 16ஆம் திகதியும் அரையிறுதிப்போட்டிகள் 18 ஆம் திகதியும் இறுதிப்போட்டி மார்ச் மாதம் 20 ஆம் திகதியும் இடம்பெற இருப்பதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற இந்த தொடரின் சாம்பியன்களாக கொழும்பு கிரிக்கெட் கழகம் தெரிவானதோடு இரண்டாம் இடத்தை சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக்கழகம் தன்வசப்படுத்திக்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More